அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

07.09.2026 துளிகள் - 36
விசுவாச தைரியத்தை நிரூபித்த தேவதாசன்!
சில போலீஸ் அதிகாரிகள் நடு ஜாமத்தில் விக்கிள்ஸ்வொர்த்தின் வீட்டுக் கதவைத் தட்டி “உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு இப்போதே இந்த வீட்டை காலி பண்ணுங்கள்” என, அவருடைய ஊழியத்திற்கு தடை ஏற்படுத்த ஆணை பிறப்பித்தார்கள்.
அதற்கு விக்கிள்ஸ்வொர்த் “உங்கள் ஆணையை மறுக்கிறேன்! ஆகிலும் உங்கள் ஆணையை ஒரு நிபந்தனையோடு ஏற்றுக் கொள்கிறேன். இங்கு வந்திருக்கிற போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள், இந்த இடத்தில் முழங்கால்படியிடுங்கள்! நான் உங்களுக்காக ஜெபிப்பேன்! அவ்வாறு ஜெபித்தபிறகு, உங்கள் ஆணையின்படி வீட்டை காலிசெய்ய நான் தயார்!” என கூறியவுடன், தெய்வ பிரசன்னத்தில் நிற்க இயலாத அந்த போலீஸ் அதிகாரிகள், மௌனமாய் திரும்பிச் சென்று விட்டார்கள்!
இவ்வாறாக தேவஊழியர் விக்கிள்ஸ்வொர்த், சுகமளிக்கும் வரம் பெற்றவராய் மாத்திரமல்ல, விசுவாச தைரிய நெஞ்சுடையவராய் கர்த்தருடைய நாமத்திற்குப் புகழ் சேர்த்தார்!
- ரத்னம்
