அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

22.09.2025
38. ‘ஆவியில் நிறைந்து வாழ்வதற்கே’ விசுவாசம் அருளப்பட்டுள்ளது!
துன்மார்க்கத்திற்கென குடிப்பவன், முதலில் ஒரு கிளாஸ் குடிக்கிறான்.... அது அவனுக்குப் போதாது.... தொடர்ந்து பத்து கிளாஸ் குடித்து மதுபான வெறிநிலை அடைகிறான்! இந்த நிலையில்தான், அவன் தடுமாறும் பாடல் பாடி மகிழ்ச்சியாயிருக்கிறான். அதுபோலவே, பரிசுத்தஆவியைப் பருகி.... உங்கள் இருதயம் நிறையும்வரை பருகுங்கள்!
இதுபோல கர்த்தருடைய ஆவியினால் வெறிகொள்ள உங்களால் முடியுமா? ஒரு துன்மார்க்கன் தன் குடியில் வெறிகொள்ள முடியுமென்றால், உங்களாலும் முடியுமென்றே வேதம் திருஷ்டாந்தப்படுத்துகிறது! ஆகவே, கண்டிப்பாய் முடியும்! எளிய விசுவாசம் கொண்டவனுக்கு முடியும்! ஆவியை குடித்து பருகிட “தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்தவனுக்கு” முடியும்! இதற்கு, இந்த அற்புத செயலுக்கே, உங்கள் விசுவாசம் உங்களுக்கு துணை நிற்கக்கடவது!
- ரத்னம்
