பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
10.01.2023

2. வீட்டில் ‘உங்கள் ஜீவிய ஒளி’ பிரகாசிக்கட்டும்!

லகத்திலும், பிரதானமாய் உங்கள் வீட்டிலும் “கிறிஸ்துவின் ஒளி” பிரகாசிக்கட்டும்! “ஜீவ வசனமே” அந்த பிரகாசிக்கும் சுடர்! (பிலி.2:14). அதாவது, நாம் வசனத்திற்கு கீழ்ப்படிந்து ஜீவித்தால், அதுவே “ஜீவ - வசன” சுடராய் நம்மில் பலன் தரும்! நீங்கள் பெற்ற ஜீவ வசனத்தை, உங்கள் பிள்ளைகளிடமோ, மனைவி அல்லது கணவரிடமோ அல்லது உங்கள் சபையிலோ ‘ஒளிவீச’ பிரயாசப்பட்டால், அது நிச்சயம் அவர்களிடம் பிரகாசிக்கும் என்றே இந்த வசனம் வாக்குத்தருகிறது! பார்த்தீர்களா, நானும் வீணாக ஓடாமல் பலன் பெற்றேன்! என் குடும்பத்தில் ஒளிதர பிரயாசப்பட்டதும் வீணாகவில்லை! என்பதே “ஜீவ - வசன” சுடரின் இரகசியம்! மெய்தான் “நீங்கள் ஜீவ சுடர்” பெறாமல் “பிறரை பிரகாசிக்கச் செய்ய இயலாது”.

முந்திய பிலிப்பியர் 2:7,8 வசனங்களில் நம் ஆண்டவரும் அப்படியே முதலாவது “தம்மைத்தாமே” தாழ்த்தினார்! “தாமே, கீழ்ப்படிந்தார்”. இப்போது அவர் பெற்ற “ஜீவ ஒளியை” உலகத்திற்கே ஒளி வீசச் செய்யும் பலனைப் பெற்றார்! ஆம், இயேசுவின் பிரயாசம் வீணாகவில்லை! இப்போது நம்முடைய பிரயாசமும் வீணாவதில்லை! ஆமென்.

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!