அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

18.08.2025
33. காலமெல்லாம் தாங்கிடும் தேவ ஒத்தாசை!
உயர்ந்த பர்வதங்களா? வானம் பூமி படைத்த கர்த்தரா? ‘எங்கிருந்து’ எனக்கு ஒத்தாசையான உதவி வரவேண்டும்? கண்களால் ஏறிட்டுப் பார்க்கும் உயர்ந்த பர்வதங்களையே மானிடன் தேடுகிறான்! பணமோ, பணம் படைத்தவர்களோ ஆகிய ‘உயர்ந்த’ ஒரிரு பர்வதத்தையல்ல, பல பர்வதங்களைத் தனக்கு ஒருவன் ஒத்தாசையாய் தேடி வைத்திருக்க முடியும் (சங்.121:1).
அந்தோ, காணும் ‘பர்வதங்கள்’ நிலைபெயரும்! மலைகளும் விலகிடுமே! வானங்களுக்கு மேலாய், கண்களால் காணமுடியா “கர்த்தரிடமிருந்து” அல்லவோ உதவி வர வேண்டும்! சர்வவல்ல பரமனின் உதவி நல்கிடும் “கிருபையின் கரம்” ஒன்றே எந்நாளும் நம்மைவிட்டு விலகுவதில்லை!! (ஏசா.54:10). கர்த்தர் ஒருவரே நம்மை காப்பவர்... ஆம், அவரை மாத்திரமே பற்றிக்கொண்டு விசுவாசிப்போருக்கு, என்றென்றைக்கும் காப்பவர்!! (சங்.121:8).
- ரத்னம்
