அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

01.09.2025
35. ‘கர்த்தரை அறிந்தவனுக்கு’ நாள்தோறும் நடந்தேறும் ஆச்சரியங்கள்!
“நீ என்னை அறிந்தவன்!” நீயே ‘பேதுரு’..... என் பாறையான கல்! என்ற இயேசுவின் பரத்தின் சாட்சி பெற்றிடுங்கள், அதுபோதும்! (மத்தேயு 16:18). இந்தக் கல்லை நிச்சயமாய் ‘இந்த உலகம்’ தள்ளிவிடும்! திடன் கொள்ளுங்கள் .....நாம் தள்ளப்பட்டாலும் மடிவதில்லை! (1கொரிந்தியர் 4:2,9). பாதாளத்தின் வாசல்களும் நம்மை மேற்கொள்ள இயலாது!!
இன்னும் கேளுங்கள் ‘அந்த தள்ளப்பட்டக் கல்லை’ தேவனே எடுத்து, தான் தீர்மானித்து கட்டும் ஒரு செயலுக்கு, அல்லது .....அவரது சபைக்கு, மூலைக்கல்லாயும் மாற்றுவார்! “இது கர்த்தருடைய செயல்..... அது எம் கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது!” என்ற கெம்பீர தொனி, ‘பேதுருவான’ யாவருக்கும் சொந்தம்!! (சங்.118:22,24).
- ரத்னம்
