பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


17.06.2024

25. பாவத்தை ஜெயித்து வாழ, கர்த்தருக்கே முக்கிய பங்கு!

 பாவ ஜீவியத்தை முற்றிலும் விட்டுவிட முடியுமோ? என்று கேட்கிறோம். இந்தக் கேள்வியே தவறானது!         

 பாவத்தை விட்டுவிடுவதும், பரிசுத்தமாய் நடப்பதும் நம்மால் ஆகிற காரியமல்ல! கர்த்தர் நம்மில் செய்ய வேண்டிய வேலையை நாம் செய்யப் பார்ப்பது பிசகு. கிறிஸ்துவின் கையில் உங்களை விட்டுவிடுங்கள். உங்கள் பாவங்களை மன்னிப்பவர் அவர். உங்களைக் கழுவுகிறவர் அவர். உங்கள் இருதயத்தை மாற்றுகிறவர் அவர். உங்களுக்குள் தமது ஆவியை வைத்து உங்களை மறுரூபமாக்குகிறவர் அவர். உங்களைப் பலப்படுத்திப் பாவத்தின் மேல் வெற்றி கொடுப்பவர் அவர்! நற்கனிகளினால் உங்கள் ஜீவியத்தை அலங்கரித்து பிறருக்கு உங்களை ஆசீர்வாத மாக்குகிறவர் அவர்! அவரே உங்களை முற்றிலும் ஆண்டுகொள்ள இடங்கொடுங்கள். அவர் உங்களுக்குள் வசிக்கட்டும். அவர் உங்களுக்குள் போதிக்கட்டும். அவரே உங்களை நடத்தட்டும். அவரே உங்களைக் காக்கட்டும். அவரே உங்களை உபயோகிக் கட்டும். அவரே உங்கள் மகிமையாக விளங்கட்டும்! இது, எவ்வளவு பாக்கியமான ஜீவியம்!

- ரத்னம்



'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!