அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

30.03.2026 துளிகள் - 13
நம்மைப் போலவே வந்து, நம்மை நேசித்த இரட்சகர்!
தேவன் மாம்சத்தில் வந்ததே, கிறிஸ்துமார்க்கத்தின் விசேஷம். ஒருவரும் கிட்டிச்சேரக்கூடாத ஒளியில் வசிக்கும் கடவுளைக் கண்டது யார்? அவருடைய தன்மை என்ன? குணமென்ன? அவரோடு ஐக்கியப்பட யாரால் கூடும்?:
அளவிலடங்காத வல்லமையும் மகிமையும் நிறைந்த தேவனோடு உறவாடிச் சிநேகமாயிருப்பது எப்படி? இதோ, ஒரு மனுஷன்! சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ளவர்! இரக்கமும் காருண்யமும் நிறைந்தவர்! கிருபையும் சத்தியமும் பொருந்தியவர்! அன்புக்கும் சிநேகத்துக்கும் ஏற்ற தயாளன்! எவரையும் புறக்கணியாது ஏற்றுக்கொள்ளும் நேசன்! அவரோடு தாராளமாகப் பேசலாம்! அவர் மார்பில் சாய்ந்துகொள்ளலாம்! நம் மனதில் உள்ள யாவையும் அவருக்குச் சொல்லலாம்! அவர் யார்? அவர் மனுஷன் மாத்திரமோ? அவரே, நம்மைப்போல் மாம்சத்தில் வந்த தெய்வம்! நம் இரட்சகர்!
- ரத்னம்
