அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
கிறிஸ்துவுக்கு ‘புறம்பான’ யாவுமே அழிந்திடும் நித்தியமற்றவைகள்! அவைகளையே ‘பழையவைகள்’ என 2கொரிந்தியர் 5:17, 4:18 கூறுகிறது. பாவ பழக்கங்கள், பிரிவினைகள், பகை விரோதங்கள் உங்களின் பழையவைகள்! உங்கள் துக்கம், சமாதானமின்மை, வியாதி போன்ற வருத்தங்களும், உங்களின் பழையவைகள்! அவிசுவாசம், மனசோர்வு, கவலைகளும் உங்களின் பழையவைகள்! ‘யாதொருவன்’ கிறிஸ்துவிடம் திரும்பி வந்து “என்னுடைய பழையவைகள் அனைத்தையும் மாற்றும்” என தாழ்த்தி ஜெபித்திடும் போது, “பழையவைகள் யாவையும் அகற்ற வல்ல கிறிஸ்துநாதர்” அவைகள் அனைத்தையும் ஒழித்து, சகலமும் புதிதாய் மாறும்படி செய்வார்! இப்போது, கிறிஸ்துவுக்குள் சகலமும் புதிதாகும் விந்தை சம்பவித்துவிடும்! இந்த விந்தை 2024 ஆண்டு முழுவதும் நம் யாவருக்கும் நிலைத்தோங்குவதாக! அல்லேலூயா!
- ரத்னம்