பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
04-07-2022

7. பக்தியுள்ளவர்களை காத்திட, கர்த்தர் அறிந்திருக்கிறார்!

 “பக்தியுள்ளவர்களை எப்படி காப்பது? என்று கர்த்தர் அறிந்திருக்கிறார்!” (2பேதுரு 2:9 - NKJV). இதை விளக்கும்படியான 5-ம் வசனத்தில், பூர்வ முழு உலகத்திலும் நீதிமானாகிய நோவா குடும்பத்தின் 8-பேரை “ஜலப்பிரளயத்தில்” கர்த்தர் காப்பாற்றினார் என்றும்! 6 முதல் 8-ம் வசனத்தில் சோதோம் கொமோரா முழு பட்டணமும் “அக்கினியில் அழிந்தபோது” ‘நீதிமானாகிய ஒரே ஒரு லோத்தை’ கர்த்தர் எப்படி காப்பாற்றினார் என்றும்! கூறிய பிறகே, 9-ம் வசனத்தில் இந்த ஆச்சரியமான ‘பக்தியுள்ள, தம்முடையவர்களை’ எப்படி காப்பது என கர்த்தர் அறிந்திருக்கிறார்! என்ற வாக்குதத்தம் நம் யாவரையும் பெலப்படுத்தி ஊக்குவிக்கிறது!

 ஆகவே, தெய்வ பயத்துடன் பக்தியான வாழ்க்கை வாழும் உங்களுக்கு திடீரென்று ‘வெள்ளம்’ சூழ்ந்தால் என்ன? அல்லது ‘அக்கினி பிரவாகம்’ தாக்கினால் என்ன? அன்று நோவா குடும்பத்தை ‘ஜலப்பிரளயத்திற்கும்’ லோத்தை ‘அக்கினிக்கும்’ காத்த தேவன் உண்மையுள்ளவராய் நின்று, உங்களைக் காப்பார் என்பதை திடமாய் நம்பி நிலைநிற்கக்கடவோம்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!