அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

23.03.2026 துளிகள் - 12
சிலுவைப்பாதை இலகுவாகும் ரகசியம், ஜெபமே!
நம்முடைய சிலுவை எத்தனை கடினமானதாய் இருந்தாலும், ஜெபமானது, அவற்றை நமக்காக இலகுவாக்கிக் கொடுக்கும். ஜெபமானது, நமது சிலுவையை ‘நமக்காக சுமக்கும்’ ஒருவரை நம்மண்டைக்கே அழைத்துக் கொண்டுவரும்! “வழி இதுவே இதிலே நடவுங்கள்” என்று சொல்லும் துணையாளரை, ஜெபம் பரலோகி லிருந்து பூவுலகிற்கு கொண்டுவரும்!
பூவுலகின் நன்மையான வழிவாசல்கள் அனைத்தும் நிரந்தர மாக நமக்கு முன்னர் அடைபடினும், “தேவனை சந்திக்கும் தனி ஜெபம்” தனது நம்பிக்கையின் ஒளிக்கதிரை ‘மூடிய கதவினூடே’ பிரகாசிக்கச் செய்யும்!
- ரத்னம்
