அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
02.06.2025
22. ஆவிக்குரிய பின்மாற்றத்தில், ஆராதனை ஆர்ப்பரிப்பு முறையற்றது!
எல்லாவற்றையும் இழந்து, கண் சொருகிப்போன குருடர்களாயிருக்கும் விசுவாசிகள், தங்கள் கௌரவத்தை மேன்மை பாராட்டிக் கொள்வதை நாம் எதற்கு ஒப்பிடக்கூடும்? தாங்கள் நிர்வாணமாயிருந்தும், அதை அறியாமலே இருக்கிறார்கள்! இந்த உலகத்தில், எப்போதும் இல்லாத அளவிற்கு அநேக எலக்ட்ரானிக் சாதனங்களை உடையவர்களாய் ‘ஐசுவரியவான்களாயும்’ இருக்கிறார்கள்! ....ஆனால், எப்போதும் இல்லாத அளவிற்கு தெய்வ வல்லமையில் குறைந்து தரித்திரர்களாய் நிற்கிறார்கள்!
இதுபோலவே ஆவிக்குரிய ஜீவியத்திலும், ஒன்றும் குறைவுபடாததைப் போல் காணப்படுகிறோம்..... ஆனால், அப்போஸ்தல சபைகளில் காணப்பட்ட அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம்! இவ்வாறு ஆவிக்குரிய நிர்வாணத்தின் வெட்கத்தை சிறிதும் உணராமல் ‘ஆராதனை’ என்ற பெயரில் ஆர்ப்பரித்துக் கொண்டாடும் ஜனத்தின் நடுவில் இயேசு நிற்பாரா?
- ரத்னம்