பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


15.07.2024

29. ‘தேர்ந்தெடுத்து’ வாழ்பவனே, உத்தம கிறிஸ்தவன்!

 ஒரு வாலிபனின் கிறிஸ்தவ ஜீவியம் ஜாக்கிரதையும், சவாலும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஜீவியமாகும்! கிறிஸ்துவைப் பின்பற்றுவது, நம்மை உல்லாச ஸ்தலத்திற்கல்ல, ஓர் போர்க் களத்திற்கே நடத்திச் செல்கின்றது! நமக்கு முன்சென்ற தளபதி “தனக்கே பிரியமாய் நடக்கவில்லை” (ரோமர் 15:3) என்பதை நாம் யாவரும் எப்போதும் ஞாபகத்தில் பதித்திடக்கடவோம்!

 வேத வசனத்தின்படி தன்னை சரிசெய்து வாழும் கிறிஸ்தவன், குறைவான முக்கியத்துவம் கொண்டவவைகளை, அதிகமான முக்கியத்துவம் கொண்டவைகளுக்குக் கீழாக ‘கீழ்ப்படுத்திட’ ஞானம் கொண்டவனாய் இருப்பான். ஆகவே ‘தேர்ந்தெடுத்தல்’ ஓர் ஜீவ பிரமாணமாகவே நமக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் நம்மால் செய்துவிட முடியாது, ஆகவே தேர்ந்தெடுங்கள்! எல்லா வற்றையும் நம்மால் வாசித்துவிட முடியாது, ஆகவே தேர்ந் தெடுங்கள்! இவ்வாறு நாம் முதலிடம் கொடுத்து தேர்ந்தெடுக்கும் சீரான ஜீவியத்தை வைத்துதான் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

  - ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!