பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
25.09.2023

22. “என் தேவை அறிந்து” கொடுக்கும் ஆண்டவர்!

 “உங்கள் பரம தகப்பன் இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறபடியால்..... ‘என்னத்தை’ உண்போம் ‘என்னத்தை’ குடிப்போம் ‘என்னத்தை’ உடுப்போம் என்று கவலைப்படாதீர்கள்..... அஞ்ஞானிகளைப் போல் நாடித் தேடாதீர்கள்” (மத்தேயு 6:31,32) என்றே இயேசு கடிந்து கூறினார். பரம தகப்பனைப் பெற்றுவிட்ட எனக்கு இவ்வுலகில் என்ன கவலை? என் உடம்பிற்கு என்ன உணவு தேவை..... என் தேவைக்கு என்ன வேலை வேண்டும்..... பட்டணத்தில் உள்ள தன் பிள்ளைக்கு எது நல்லது.... கிராமத்தில் உள்ள தன் பிள்ளைக்கு எது நல்லது..... அத்தனையும் அவரே “இன்னது தேவை” என தீர்மானித்து தருவது நாம் பெற்ற பாக்கியமல்லவா? இன்று அனேகருடைய ஜெப வாழ்க்கையில் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுவதற்கு காரணம் என்ன? இப்பூமிக்குரிய சாதாரண உணவிலிருந்து ..... வீடு, படிப்பு, திருமணம் போன்ற அனைத்திலும், ‘அவர்கள் ஜெபத்தில் கேட்டது கிடைக்கவில்லை’ என்ற காரணமேயாகும்! இனிமுதல் “கர்த்தரே” எனக்கு இன்னது தேவை என அறிந்து கொடுப்பார் என சமாதானத்துடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்!


- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!