அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

31.08.2026 துளிகள் - 35
சந்தோஷமல்ல, பரிசுத்தமே நமது எல்லை!`
உங்கள் பரிசுத்தத்தில் கறை ஏற்பட்டால் உங்கள் சந்தோஷம் மங்குவதாக! அவ்வித தருணத்தில் நீங்கள் தேவனிடம் உடனே சென்று “ஆண்டவரே நான் மகிழ்ச்சியாயிருக்கிறேனோ அல்லது இல்லையோ என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல, ஆனால் தயவுசெய்து என்னை மீண்டும் பரிசுத்தமாக்கும்” என வேண்டிக் கேளுங்கள்! இருப்பினும் ஒன்றை உங்களுக்கு அறுதியிட்டு உறுதியாய் நான் கூறிட முடியும்: “முடிவில், நீங்கள் எந்த அளவு பரிசுத்தமாயிருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு நிச்சயம் மகிழ்ச்சியாயும் இருப்பீர்கள்!” ஆமென்.
- ரத்னம்
