அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

23.06.2025
25. இக்கடைசி நாட்களில் சபையில் பரிசுத்தம் காக்கப்பட வேண்டும்!
சத்திய வேதத்தில் கூறியிருக்கிறபடி, நாம் லவோதிக்கேயா சபையின் காலத்திலிருக்கிறோம். ஆக, நமது சபைகளுக்கே பரிசுத்த சுடரின் சுவிசேஷம் அதிகம் தேவைப்படுகிறது. உலகத்தை விட்டுப் பிரிந்து, இரட்சகர் இயேசுவிடமே முழு மனதோடு பக்தி செலுத்த வேண்டுமென்று, நமது சபை களுக்குப் புத்தி சொல்ல வேண்டும். உலகத்தோடு ஒத்து நடக்கும் ஒரு சபையில், உண்மையாய் மறு பிறப்படைந்த ஒரு மனிதன் தரித்திருக்க மாட்டான். சத்தியத்திற்கு மாறுபாடான சமரசப்போக்கை, தேவனுடைய வசனம் கண்டனம் செய்கிறது! லௌகீக சமரசமும், பாவ அந்தகாரமும் தூய சபைகளிலிருந்து அகற்றப்பட வேண்டும்! ஐக்கியம் வேண்டும்.... ஆனால், விசுவாச துரோகத்தை எதிர்க்கவே ஐக்கியம் வேண்டும்!!
- ரத்னம்
