அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

28.07.2025
30. ‘துன்பத்திலும் மாறாத’ பசுமை ஜீவியம் உண்டு!
கொல்கொதா மேட்டின் உச்ச கட்ட சூழ்நிலையில் “உமக்காக அழுகிறோம்!” என இயேசுவின் அருகில் வந்து கூறியவர்களிடம் “என்னை அன்புகூரும் எருசலேம் குமாரத்திகளே .....” என அழைத்து, தன் ‘பசுமை குன்றா மகிழ்ச்சி முகத்தை’ அவர்களுக்கு காட்டினார்! “ஆ, இது ஆச்சரியம், அவர் பச்சைமரம்! ......சோர்ந்து அழுத நாங்களே பட்டைமரம்!”என்ற மேலான வெளிச்சத்தைப் பெற்றார்கள் அந்த எருசலேம் நங்கைகள்!! (லூக்கா23:31). ‘இருதயம் சோர்ந்து போகாத’ இந்த அற்புத ஜீவியத்தை, தேவன் இன்றும், சிலுவை பாதையில் முன்சென்றிடும் நமக்கும் தந்து கிருபை செய்வார்! ஆமென்.
- ரத்னம்
