அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
09.06.2025
23. உங்களைப் ‘பொன்னாக மாற்றும்’ கர்த்தர்!
சுற்றி நின்ற நண்பர்கள்கூட “உன் கஷ்ட சூழ்நிலையை பார், தேவன் உன்னை கைவிட்டார்! உன் தேவன் எங்கே?” என யோபுவிடம் கரிசனையில்லாமல் கூறியதைக் கேட்டு, யோபு சற்றே தடுமாறினார்! கொஞ்சம் மௌனத்திற்குப் பிறகு, மனம் தெளிந்த யோபு, உறுதியான குரலில் “சினேகிதன் எலிப்பாஸ், கேள்! இந்த கொடிய சூழ்நிலையில் ‘நான் அவரைப் பார்க்காவிட்டாலும்’ என் இடப்பக்கத்தில் தேவன் கிரியை செய்வதையும், என் வலப்பக்கத்தில் கிரியை செய்வதையும் திட்டமாய் உணர்கிறேன்! அவரது கிரியை முடிந்ததும் “என் தேவனின் கையில் பொன்னாய் ஜொலிப்பேன்” (யோபு 23:8-10) என கூறியதும், சற்று வெட்கத்துடன் எலிப்பாஸ் தூர நின்றான்! உங்களைப் ‘பொன்னாக’ மாற்றும் கர்த்தர்!
‘அக்கினியும்’ எனது நன்மைக்கே என அறிவது ஜெய ஜீவியம்!
- ரத்னம்