அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

17.11.2025
45. ‘பாவத்தின் மேல்’ நமது வெற்றியின் இரகசியம்!
“இந்த செயல் பாவமென்று” நாம் அறிந்து கொள்ளாததை சிலுவையிலறைந்து களைந்து போடுவது சாத்தியமாகாது! இருப்பினும், நம் பாவத்தைக் குறித்த வெளிச்சத்தை எப்போதெல்லாம் பெறுகிறோமோ, அப்போதெல்லாம் அவைகள் சிலுவையிலறையப்பட முடியும்.... அப்படி அறையப்பட்டே ஆக வேண்டும்!
“பாவம் செய்யும்படியாக” நம்மைத் தூண்டும் அனைத்துமே பழைய மனிதனிடமிருந்துதான் பிறக்கிறது! எனவே பழைய மனிதனை நாம் முற்றிலுமாக களைந்து போட்டு, இனி தொடர்ந்து “இது பாவமென” நமக்கு வெளிச்சம் கிடைத்த அனைத்து பாவத்தையும் நாம் ஜெயித்திட முடியும் என்பதே சிலுவை நமக்குத் தரும் வெற்றி!
- ரத்னம்
