அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

04.05.2026 துளிகள் - 18
சுயத்தின் சுமை அகற்றும் ஆனந்த சுவிசேஷம்!
“சுயம்” என்பதை, உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் சுமக்கும் “சுமை” என அறிந்தவன் மாத்திரமே “சிலுவை வழியை” போற்றுவான்! சுவிசேஷத்தில், ஒட்டகம் என இயேசு பொருள் படுத்தியது, சுமை சுமக்கும் ஒட்டகமேயாகும்! வனாந்திர நீண்ட பயணத்தில் பயணிக்கும் ஒட்டகம், “தன் சுமையை இறக்கிட” ஆசையாய் இருக்கும்! “ஒட்டகமே, உன் சுமையிலிருந்து சம்பூர்ண விடுதலை பெற்று, நெருக்கமான வழியாய் சுதந்திரம் அடைவாயாக!” என ஒட்டகத்திற்கு இயேசு கூறுவதைப் போன்ற நற்செய்தியைப் பாருங்கள்! அவ்வளவுதான், அந்த ஒட்டகம் பேரானந்தம் கொண்டு “எஜமானே, சுமை இறக்க சுவிசேஷம் தந்தவரே! என் முதுகில் டன் டன்னாய் ஏறியிருக்கும் சுமையை மடமடவென்று இறக்கிவிட்டேன்! இதோ, நான் இப்போது ‘நெருக்கமான வழியென்ன’ ஊசிமுனை வழியாகக்கூட கடந்து “விடுதலை ஜீவியம் பெறுவேன்” எனக்கூறி ஆனந்திக்கும்! (மாற்கு 10:25).
- ரத்னம்
