அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

02.03.2026 துளிகள் - 9
பின்மாற்றம் துவங்கும் இடம், எச்சரிக்கை!
அநேக பின்மாற்றங்களுக்கான காரணம் யாது? தனி ஜெப வாழ்க்கையை அசட்டை பண்ணியதே பின்மாற்றமடைவதற்கான காரணங்களில் மிக பிரதானமாகும். பின்மாற்றக்காரன் தவறி விழுந்த இடத்தைப்பற்றிய ‘இரகசிய சரித்திரம்’ உண்மையில் கடைசி நாள் மட்டும் தெரியாது. கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அநேக மனித உள்ளங்களைச் சந்தித்தவனுமான எனது கருத்தின்படி பின்மாற்றம் எப்போதுமே தனி ஜெபவாழ்வை அசட்டைபண்ணுவதன் விளை வாகவே ஆரம்பமாகின்றது!
ஜெபமின்றி வாசிக்கும் வேதவாசிப்பு, ஜெபமின்றி கேட்கும் பிரசங்கங்கள், ஜெபமின்றி ஒழுங்கு செய்துகொண்ட திருமணங்கள், ஜெபமின்றி மேற்கொண்ட பிரயாணங்கள், ஜெபமின்றி செய்து கொண்ட தோழமைகள்.... போன்றவை ஒரு மனிதன் பின்மாற்ற மடைவதற்கும், ஆவிக்குரிய வாழ்வில் பெரும் வீழ்ச்சியடைவதற்கும் அப்பட்டமான காரணங்களாகும்.
- ரத்னம்
