அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
23.12.2024
52. தேவனை ‘விலைமதியா பொக்கிஷமாய்’ காத்து நடவுங்கள்!
“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பது” ஒன்றே நமது பெலனாய் இருக்கிறது! (கொலோசெயர் 1:27). இந்த பாக்கியமான நிலையை “தன் ஆவிக்குரிய விழிப்பான உணர்வை” வைத்து பாதுகாத்துக் கொண்டவன் “பிசாசுக்கு” ஒருபோதும் அஞ்சிடமாட்டான். ஒருவேளை, சாத்தான் என்னை சுளகில் வைத்து புடைத்திட தீர்மானிக்கலாம்...... நான் அறியாத அக்கினியாஸ்திரங்களை என்மீது எய்திடலாம்! அதினாலென்ன? “நான் ஒன்றாய் இணைந்துள்ள அந்த ‘மகா தேவனை’ அவனால் என்ன செய்திட முடியும்? எனக்குள் வாசமாயிருக்கும் அந்தப் பெரியவரை ஜெயித்திட அவனால் கூடுமா? என் சுபாவத்தை மாற்றி, என்னுள் வாசம் செய்யும் அந்த ‘மகா தேவனின்’ சுபாவத்தை அவனால் வென்றிட முடியுமா? ஒருக்காலும் முடியாதே!! ஆகவே, கிறிஸ்துவாகிய அந்த விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை எக்காலத்தும் இழந்திடாதிருக்க ஜாக்கிரதை கொண்டிருங்கள்!
- ரத்னம்