அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

27.04.2026 துளிகள் - 17
உபத்திரவங்களே ‘நம் உண்மையான நிலையை’ காண்பிக்கிறது!
உண்மை கிறிஸ்தவனுக்கு தேவன், ஒருபோதும் கஷ்டங்களை அனுப்புவதே கிடையாது! “அதெப்படி? உபத்திரவங்கள் கஷ்டங்களில்லையா?” என நீங்கள் கேட்கலாம். அப்படி ஒருக்காலும் கிடையாது! மாறாக, உபத்திரவங்கள் நம்மைத் தேடிவரும் பெரும் உதவியே ஆகும். நம் உண்மையான நிலை இன்னது என நாம் கண்டுபிடிப்பதற்கே உபத்திரவங்கள் உதவுகின்றன!
ஒவ்வொரு சூழ்நிலைகளுக்குரிய தேவசித்தத்தைத்தான் வேதாகமம் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றதே! வேதம் காட்டும் நல்வழிகளில் நாம் சென்று விட்டால், நமக்கு ஒருபோதும் எவ்விதக் கஷ்டங்களும் இல்லை! நிச்சயமாய் இல்லை!!
- ரத்னம்
