அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

25.05.2026 துளிகள் - 21
உத்தம தாசர்களை சார்ந்தே, சபையின் வலிமை உள்ளது!
நம்முடைய ஸ்தல சபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் தோற்றுவிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்த மாந்தர்களால் கூட்டப்பட்டிருக்க வேண்டும். அப்போது மாத்திரமே, கூடிவந்தவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்து ஆராதிப்பவர்களாய் இருப்பார்கள். அவர்களை நடத்தும் மேய்ப்பன், அபிஷேகத்தால் நிறைந்தவனும், எல்லா விதத்திலும் நல்ல மாதிரி உள்ளவனாய் இருக்க வேண்டும்! உத்தம தலைவர்களைக் கொண்டே சபையின் ஸ்திர தன்மை கணக்கிடப்படுகின்றது. அவ்வித சபை மிக சிறியதாயிருந்தாலும், அன்று அப்போஸ்தலர்கள் நாட்களில் செய்து முடித்த அதே கிரியைகளை, இந்த அற்பமான சிறிய சபைகளிலும் தேவன் நிச்சயமாய் செய்து முடிப்பார். அந்த சிறிய சபையின் வலிமை எல்லாம் “தேவன் எங்கள் நடுவில் வீற்றிருக்கிறார்!” என்ற வலிமையே ஆகும்.
- ரத்னம்
