பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

6.காத்திருக்கும் ஜெபம், வாழ்வின் ஜெயம்!

தேதி: 05.02.2018

விரைந்து ஓடி வந்து “உயிர்த்தெழுந்த இயேசுவை” காண வந்தார் பேதுரு! சிறிது நேரம் ‘கல்லறையை’ தேடிப்பார்த்துவிட்டு “இயேசுவை காணாமல்” மீண்டும் தன் இருப்பிடம் ஓடிவிட்டார்! (யோ.20:4,10). ஆனால், மகதலேனா மரியாளோ,“என் ஆண்டவர் எங்கே?” என தேடி, அவரைக் காணாமல் அழுது..... மருவி நின்ற அவளிடம் ஒரு தோட்டக்காரன்போல் வந்த இயேசு ‘நீ யாரைத் தேடுகிறாய்?’ என கேட்டு .... அவள், “இயேசுவைத்தான் தேடுகிறாள்!” என்ற அவளின் உறுதியைக் கண்டு தன்னை அவளுக்கு வெளிப்படுத்தினார்! (யோவான்.20:15,16).

இந்த மகதலேனா மரியாளைப்போல் தனிமையில் “கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் மாத்திரமே” அவரைக் காண்பார்கள்! ஆ.... அது போதுமே! நாம் புதுபெலன் அடைவோம்! கண்ணீர் துடைப்போம்! அன்று முழுவதும் அவர் சித்தம் செய்வோம்! ...... இனி அடுத்து, மீண்டும் காலையில் அவர் முகம் தேடுவோம்... அவரை கண்டடைவோம்! பொதுவான ஜெபத்தில் ஓடிவந்தவர்கள் அல்ல..... அவரைத்தேடும் ‘தாபரித்த’ ஜெபம் கொண்டவர்களே, அவரை கண்டடைந்து, நாள்தோறும் புதுபெலன் அடைவார்கள்! ஆமென்.

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!