அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

29.12.2025
52. கிருபையினால் இருதயம் ஸ்திரப்படுவதே நல்லது!
இவ்வுலகில் வாழும் ஜீவியத்தைக் காட்டிலும், “தேவ கிருபையே” மிகவும் நல்லது! என்றே சங்கீதம் 63:3 அறிவிக்கிறது! துன்பத்தின் ஏற்ற சமயத்தில் தாங்கி உதவிடும் ‘தெய்வ கிருபையிழந்து’ வாழ்வதில் பயன் ஏது? இதையறிந்த அவரது மக்கள் “என் பெலவீனமேயானாலும், எனக்கு பலம் தரும் உமது கிருபை போதும்” என்பர்! (2கொரி.12:9). வாழ்விற்கு கஞ்சி உணவானாலும், பாயில் படுத்தாலும், குடிசையில் வாழ்ந்தாலும் ஒரு பொருட்டல்ல! “உம் கிருபையினாலே” இருதயம் ஸ்திரப்பட்டு வாழ்வதே,
எம் ஜீவியத்தின் பாக்கியம்! (எபி.13:9).
- ரத்னம்
