அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

16.02.2026 துளிகள் - 7
‘இயேசுவுக்குள்’ நாம் இருப்பதே, விசுவாசத்தின் நீதி!
இயேசுவிடம், அந்திரேயா கூறிய வார்த்தையை கவனியுங்கள். “இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” என்ற தகவலை கூறினார் (யோவான் 6:9). அந்த அப்பங்கள் சிறியதா அல்லது பெரியதா என்பதெல்லாம் கூறப்படவில்லை.
அதுபோலவே நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய ஊழியத்திலும் எவ்வளவு கொஞ்சம் இருக்கிறது? என்ற அளவு இயேசுவுக்கு ஒரு பொருட்டல்ல. மாறாக “இயேசு அந்த அப்பங்களை எடுத்து” புழங்கினார் என்பதுதான், 11-ம் வசனம் கூறும் மேன்மை! மிகச்சிறியதை மிகப்பெரியதாய் மாற்றும் இயேசுவுக்குள் நாம் இருக்கும் விசுவாசமே, நாம் கண்ட தேவ நீதியாயிருக்கிறது!
- ரத்னம்
