அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

22.06.2026 துளிகள் - 25
‘கொந்தளிப்பின் கடலில்’ அமைதி சிருஷ்டிப்பவர் நம் இயேசு!
அத்தனை பெரிய புயலின் மத்தியில், ஒரு களைப்படைந்த பிள்ளை தூங்குவதைப் போலவே, இயேசு அந்த படகில் நித்திரை செய்தார். படகின் அடித்தட்டிற்குச் சென்ற அவர், ஒரு தலையணையை தலைக்குக் கீழாக வைத்து ‘ஏதோ முன்குறித்த நோக்கத்திற்காக திட்டமிட்டதைப் போல்’ ஆழ்ந்து இளைப் பாறினார்! “இந்த உள்ளான அமைதி” மிகுந்த ஆச்சரிய மல்லவா? இயேசுவுக்குள் தெய்வ அமைதி (REST) காணப்பட்டபடியால், வெளியே புயலில் நின்ற மற்றவர்களுக்கும் ‘குடும்பத்திற்கும்’ அமைதி உண்டானது! ஆகவே, புயலில் ‘அமைதியே’ நமது வெற்றி!
- ரத்னம்
