அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

19.01.2026
03. ஜீவன் பெற ‘இயேசுவை விசுவாசத்தோடு’ காணும் கண்கள் வேண்டும்!
மனித அறிவின்படி, கல்வாரி சிலுவையில் அவரோடு வேறு யாருமே அறையப் படவில்லையே? பின் எப்படி நம் பழைய மனிதன் அவரோடு, அதே சிலுவையில், ஒரே சமயத்தில், அறையப்பட்டிருக்க முடியும்? கவனியுங்கள்: இயேசு நம்மைப் போலவே மனுஷகுமாரனாய் வந்து, நம் போன்ற மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய்.... நமக்குள் வாசம் செய்யும் “சுயசித்தத்தையும்” பெற்றிருந்தாரே, ஆ! அதுவே அந்த இரகசியம்!! இப்போதோ, இந்த சுயசித்தத்தை இயேசு ஆக்கினைக்குள்ளாய் தீர்த்து ஜெயித்துவிட்டார்.
எனவேதான், இந்த செயலை, நம்முடைய பழைய மனிதன் கிறிஸ்துவோடு சிலுவையிலறையப்பட்டதாகவும், கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நாம் முழுமையாய் மரித்ததாகவும் பிதா அறிவிக்கிறார். இந்த செயலைக் காணும்படி திறக்கப்படும் “விசுவாச கண்கள்” பாக்கியமுள்ளது!
- ரத்னம்
