பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


16.10.2023

25. நேற்றும், இன்றும், என்றும் ஜெயம் தருபவர்!

சீயோன் குமாரத்தியின் ‘ராஜாவாக’ ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி, நம்மிடம் வருகிறார்! என்ற நற்செய்தி இன்றும் நம் எல்லோருக்கும் உரியதாகும்! கடைசி யுத்தத்தில் ‘சத்துருக்களை ஜெயித்திட’ அவர் வெண் குதிரையில் வருவார்! இப்போதோ, பூமியில் வாழும் தம்முடையவர்களை விசாரித்து, கண்ணீர் துடைத்து, ஆறுதல் செய்திட, அவர் தாழ்மையான கழுதை குட்டியின் மேல் ஏறி நம்மிடம் வருவது, நாம் நாள்தோறும் பெற்ற பாக்கியமன்றோ! கர்த்தர் நமக்குச் செய்த, இனி செய்யப்போகிற மகத்துவமே “முன் நடப்பாரும் பின் நடப்பாரும் ஓசன்னா! கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்..... ஓசன்னா!” என்ற ஆர்ப்பரிப்பு! இந்த பாக்கியம் ‘அவருக்கு சொந்தமான’ எல்லோருக்கும் உரியதாகும்! (மாற்கு.11:9).

இன்று, எங்களுக்கு நேர்ந்த இன்னல் நேரத்தில், ‘ஜெயம் தருபவர்’ இதோ, எங்களிடம் வந்து கொண்டிருக்கிறார்! என்பதே, முன் நடப்பாரின் ஓசன்னா! நேற்று சந்தித்த உபத்திரவத்தில், ‘ஜெயம் தந்தவர் எங்கள் ராஜா’ இதோ, ஜெயித்து முன்செல்கிறார்! என்பதே பின்நடப்பவரின் ஓசன்னா! இந்த ஓசன்னா ஜெய முழக்கம் அவரை ராஜாவாய் கொண்ட அனைவருக்கும் ‘நேற்றும், இன்றும்’ என்றும் உண்டு!


- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!