நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

02.07.2026 27வது வாரம்
தெய்வ அன்பை கண்டவர்கள், ஜெயம் பெற்றவர்கள்

அநேக கிறிஸ்தவர்கள் ‘துன்பங்களை மாத்திரம்’ காண்கிறார்களே அல்லாமல், “தெய்வ அன்பின் பாதுகாப்பையோ” காணத் தவறுகிறார்கள். இவர்களின் கண்கள் “மொர்தெகாயின் நன்மைக்குச் செயல்பட்ட” தெய்வ அன்பைக் கண்டிருந்தால், துன்பமென்னும் மலையை நிமிர்ந்த தோளோடு எதிர்த்து நின்றிருப்பார்களே! அந்த மலை, சமுத்திரத்தின் நடுவில் கவிழ்ந்துவிழும் அற்புத ஜெயத்தையும் கண்டிருப்பார்களே!
திரண்ட தண்ணீர்களும் தேவன் நம்மீது கொண்ட ‘நேசத்தை’ அவிக்கமாட்டாது! வெள்ளங்களும் ‘இந்த அன்பைத்’ தணிக்க மாட்டாது! ஏன், மரணத்தையே நேருக்கு நேர் நின்று ‘இந்த அன்பு’ சவாலிடும்....என அன்பரின் அன்பில் சூலமித்தியாள் ஆர்ப்பரித்தாள்! (உன்.8:6,7). பாரச்சிலுவையும்..... அதைத் தொடர்ந்து, மரணமே வந்தாலென்ன? எல்லாம் 3 - நாட்கள்தான்! மூன்றாம் நாளில், என் அன்பு பிதா என்னை உயிர்ப்பிப்பார்.... என்ற இயேசுவின் முழக்கம் மெய்தான் என்பதை இன்று நாம் யாவரும் அறிந்திருக்கிறோமே! தெய்வ அன்பில் இயேசுவை உயிர்த்தெழ வைத்த வல்லமையை இப்பாருலகிற்கு சவாலிட, தீரமிக்க சீஷர்களே இன்று தேவை!
- ரத்னம்
