நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

23.07.2026 30வது வாரம்
‘அன்பே’ இருதயமாய் கொண்ட நம் இயேசு!

தேவன் நம்மை ‘மாறாத அன்பினால்’ எவ்வாறு அன்புகூருகிறார்? என்ற கேள்விக்கு, “தேவனுடைய இருதயமே” அன்பினால் உருவாக்கப்பட்டு இருக்கிறது! என்ற ஒரேயொரு காரணமேயாகும். விசுவாசிகளாகிய நீங்களே கூறுங்கள் “அவரே உங்களை சிருஷ்டித்தார்...... அவரே உங்கள் பாவங்களுக்காக மரித்தார்! அப்படியிருக்க, உங்களை எப்படி அன்புகூராமல் இருப்பார்?..... இந்த உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?” இவ்வாறு, அவரது தெய்வ அன்பு இன்னதென்பதை உங்களால் அறிய முடியவில்லை யென்றால்..... உங்கள் வாழ்வில் துன்பமும், நஷ்டமும் ஏற்படும்போது, உங்கள் விண்ணப்பத்தை அவரிடம் விசுவாசத்தோடு கூறி உங்களால் எங்ஙனம் ஜெபிக்க முடியும்? ஆகவே “சகல நன்மைக்கும் ஊற்றாய் திகழ்பவரிடத்தில் கிட்டிச் சேருங்கள்”. இந்த பூமியிலுள்ள யாதொரு சிருஷ்டிப்பின் மீதும் கொண்ட முறுமுறுப்புகளையும் அகற்றி, தேவனிடம் கிட்டிச் சேருங்கள். அவரிடம் இவ்வாறு கிட்டிச் சேருகிறவன் மாத்திரமே தன் வாழ்வில் ‘ஜெபம்’ இன்னதென்று அறிந்தவனாய் இருப்பான்! ஜெபத்தில், தனது தேவைகளை விண்ணப்பிக்கும் அவன், அந்த தேவைகளுக்கு ஏற்ப, தேவன் உதவியளிக்கும் கிருபைகளையும் சேர்த்தே வழங்குகிறார்! என்பதை விசுவாசித்து அறிந்து, அவரது கிருபைகளையும் தயவாய் கேட்டிடுவான்!
- ரத்னம்
