பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


03.10.2024

40.  எந்த நிலையிலும் ‘சத்தியம் ஒன்றே’ சபையில் எதிரொலிக்க வேண்டும்!


  ரு சபையில் செய்தி வழங்க எழுந்து நிற்பவர், கூடியிருக்கும் அனைத்து ஆத்துமாக்களின் நன்மையை இலக்காய் வைத்தே பிரசங்கிக்க வேண்டும். அது, பரத்திலிருந்து உண்டாகும் தீர்க்கதரிசன வார்த்தையாக இருந்தாலும் நல்லதுதான் அல்லது தன் சொந்த ஜீவிய ஊற்றுக்கண்ணிலிருந்து பேசுவதாயிருந்தாலும் நல்லதுதான்! அதன் விளைவாய் ஊழியத்தின் பணி நிறைவான பலன் தரும். அமர்ந்திருந்து கேட்டவர்கள் அனைவரும், திவ்ய சுபாவத்தில்.... அவரவர்கள் சுபாவத்திலிருந்து இன்னும் கொஞ்சம் தெய்வீகத்தில் வளர்ந்திருப்பார்கள். இது ஒன்றுதான் செம்மையான பிரசங்க ஊழியம்!

 அதற்குப் பதிலாக மேடையில் நின்று பேச வந்தவர், யாரோ சில நபரை குறிவைத்து பேசக்கூடாது! அவரை இரகசியமாய் நிந்தனைக்கு உட்படுத்தலாம் என்று எண்ணியும் பேசக்கூடாது. இதுபோன்ற குணாதிசயங்கள் உயிருள்ள சபைக்கு உகந்ததல்ல, அல்லவே அல்ல! அது பேய்கள் தாராளமாய் நடமாடும் ஒரு கூட்டத்திற்கு மாத்திரமே உரியது என்ற உண்மையை இன்று அறிந்து கொள்ளுங்கள்! 

 இந்த கொடுமைக்கு விலகிய பிறகு.... யாரோ ஒருவரது செயல் அல்லது சபையில் ஏற்பட்ட தீய நிகழ்வுகள் மூலமாய் சபைக்கும் சபை மக்களுக்கும் ‘ஓர் சத்தியம் வெளிப்பட்டால்’ அதை பிரசங்க மேடையில் நிற்பவர், மிகுந்த பொறுப்புடன் வெளிப்படுத்தி காண்பிக்க வேண்டும். அதுபோன்ற சத்தியம் மாத்திரமே, ஜனங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரமுடியும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!