பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
04.04.2024



14.  தோல்வியிலும் நம்மைத் திரும்ப வனைந்திடும் கர்த்தர்!

 நமது பாவ ஜீவியத்தால் நம்மை எவ்வளவோ கெடுத்திருந்தாலும், இனஜனத்தார் நம்மை ஆகாதவர்கள் என்று தள்ளிவிட்டாலும், நமது பாழான ஜீவியம் நமக்கே அருவருப்பாகி, உயிரோடிருப்பதிலும் செத்துப்போவது நல்லதென்று நாம் நினைத்திருந்தாலும், சாபத்துக்கேதுவான நம்மை ஆசீர்வாத பாத்திரங்களாக்க ஆண்டவரால் கூடும்! எரேமியா 18-ம் அதிகாரத்தில் தேவன் காண்பித்த:

  அந்தக் குயவன் செய்ததுபோல், நான் உங்களை மறுபடியும் நல்ல பாத்திரங்களாகச் செய்யக்கூடாதா? என்று கர்த்தர் கேட்கிறார். பரம குயவனாகிய கிறிஸ்துவின் கையில் களிமண்ணைப்போல் நம்மை வைத்திடுவோமாக!

 அவர் தமது வேலையை ஆரம்பித்து “பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோக மானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாக்குவார்” (2தீமோ.2:21). இப்படிப்பட்ட ஜீவியமே நமக்கும் நமது குடும்பத்துக்கும், இம்மைக்கும் மறுமைக்கும் ஆசீர்வாதம்! அப்போது, சகல நிர்பந்தங்களும் நீங்கும். சகல ஆசீர்வாதங்களும் தங்கும்! இதுவே கிறிஸ்து மார்க்கம். இந்த ஜீவியத்தில் பிரவேசித்தவர்களுக்குத்தான் இதன் பாக்கியமும் ஆசீர்வாதமும் தெரியும். மற்றவர்களுக்கு என்ன தெரியும்? பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாயுள்ளவர்களின் திரளான தொகை, கிறிஸ்து மார்க்கத்துக்கு பெரிய தடை! கர்த்தர் அவர்களுக்கு இரங்குவாராக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!