பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


19.09.2024

38.  கர்த்தருடைய சமூகத்தில் ஈர்க்கப்பட்டவர்கள், சுத்திகரிக்கவும்படுவர்!


 தேவன் உங்களைத் தன்னிடம் அழைப்பதற்கு, உங்களைத் தெரிந்து கொண்டால் மாத்திரமே ஒழிய.... ஒருவன் தேவனிடம் கிட்டிச் சேர்வது ஒருக்காலும் முடியாது. இந்த உண்மையை இயேசு கூறும்போது “நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்!” என ஆணித்தரமாகக் கூறினார் (யோவான் 15:16).

 நாம் செய்ய வேண்டியதெல்லாம் வெகு சொற்பமேயாகும். “தேவனை அறிய வேண்டும் என்ற உங்கள் நெஞ்சத்தின் விருப்பத்தை பின் தொடர்வதும்! உலகத்தின் துர்குணத்திலிருந்து திரும்புவதும்! தேவனை விட்டுவிடாது உறுதியுடன் அவரோடு நடப்பதற்கு தீர்மானிப்பதுமே உங்கள் பங்கு!!” தேவனுக்கென்று ஒரு கவர்ச்சியான சுபாவம் உண்டு! அவரது அந்த மாசற்ற கவர்ச்சியே “உங்களை அவரிடம்” இழுத்துக் கொள்ளும்! அவர் உங்களைத் தன்னிடம் இழுத்துக் கொள்ளும் அதே வேளையில், உங்களை சுத்திகரிக்கவும் செய்வார். ஆம், பூமியிலிருக்கும் தண்ணீரை சூரியன் இழுத்துக் கொள்கிறது. வானிற்குச் சென்றுவிட்ட நீர், எத்தனை சுத்தமாய் இருக்கிறது! அவ்வாறு இழுத்துக் கொள்ளப்பட்ட தண்ணீர்கள் யாவும், சூரிய வெப்பத்தின் கரத்திற்குள்ளாகவே அடங்கியிருக்கும்! அதே விதமாகவே, நாமும் தேவனால் இழுத்துக் கொள்ளப்பட, நம்மை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்திட வேண்டும்! அவர் சமூகத்தில் தூய்மை பெறவும் வேண்டும்!

(மேடம் குயான் எழுதிய ‘ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி?’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த பரவசம் நிறைந்த புத்தகம் பெற பரலோக பொக்கிஷங்கள் Ph.No.98430 49935 தொடர்பு கொள்ளவும்.)


வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!