நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

11.12.2025
50. அவரை ஆராதித்து அன்புகூர்பவனே, நித்திய ஊழியம் பெறுவான்!
மெய்யான ஆராதனையே, தேவனோடு நம்மை உயரச் செய்கிறது! அல்லது, தேவனை இழந்து, தாழச் செய்கிறது! கிறிஸ்தவனுக்கும், கிறிஸ்தவ சபையிலும் நிலவிவரும் கொடிய வியாதி என்னவென்றால், தேவன் அவர்களுக்கு சாமானிய சகஜமாய் இருப்பதுபோல், இருப்பதுதான்! மகா உன்னத தேவனை அவர்கள் கொண்டிருப்பதாக தோன்றவில்லை! ஏனெனில், ‘ஆராதிப்பவன்’ பரிசுத்தமும் தாழ்மையுமாய் இருந்திருக்க வேன்டும். ஆத்துமத்தின் இந்த இரகசியமே, தேவனுடைய சாயலை அவன் மனதாரக் கண்டு உணரச் செய்திட முடியும்!
மனந்திரும்பி விசுவாசியாய் மாறிய ஒவ்வொருவனும் ‘முதலாவது’ அவரை ஆராதிக்கவும்! ‘இரண்டாவதாகவே’ அவருக்கு ஊழியஞ் செய்யவும் தேவன் அழைத்திருக்கிறார்! மெய்யாகவே, ஆராதிப்பவனின் ஊழியத்தில் மாத்திரமே ‘நித்தியம்’ இடம்பெறும்!
- ரத்னம்
