பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
24.08.2023  

11. ஆவிக்குரிய வரங்களை ‘மனுஷீக திறமைகள்’ புறக்கணிக்கும் காலம்!



புதிய ஏற்பாடு வழங்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம், சபை ஊழியங்கள் “ஆவியின் வரங்களினால்” ஆட்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், காலங்கள் கடந்து செல்லச் செல்ல, ‘இந்த பொக்கிஷம்’ சபை ஊழியங்களில் மங்கிக்கொண்டே போகிறது. ஆவியின் வரங்கள் ஒன்பது என்றே ஜனங்கள் முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் 1கொரி.12:4-11, 27-31; ரோமர் 12:3-8; எபே.4:7-11 ஆகிய வசனங்களை தொகையிட்டால் இங்கு பவுல், சுமார் 17 வரங்களுக்கு மேல் குறிப்பிட்டிருக்கிறார். நாம் கவனித்துப் பார்க்க வேண்டியது என்னவென்றால், இவ்வித ஊழிய தாலந்துங்கள் இயற்கையான திறமைகள் அல்ல! அது, அந்த விசுவாசியின் உத்தம ஜீவியத்தை ஆதாரமாய் வைத்து, பரிசுத்தாவியானவர் அவனுக்கு வழங்கும் வரங்களாகும். இவர்களையே, கிறிஸ்துவின் சரீரத்தில் ஓர் பங்காக பரிசுத்தாவியானவர் ஏற்படுத்தியுள்ளார். காலங்கள் கடந்து செல்லச் செல்ல சுவிசேஷ போதகர்களிடம் ‘ஆதிநிலை மங்கத் துவங்கிவிட்டது’.

ஆவியின் வரங்கள் பெற்ற தாசர்களுக்குப் பதிலாக, கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும், அவர்களின் பட்டம், பதவி, பணம் அடிப்படையில் ‘ஊழிய’ தேர்தல் நடத்தப்படுகிறது! ‘மானிட அறிவு வரம் கொண்ட’ திறமைசாலிகள் குழுக்களாய் கூடி விவாதித்து, அரசியல் போன்று சபை நடத்தும் கொடுமை வெகுவாய் தலைவிரித்தாடுகிறது. இருப்பினும், தேவன் உண்மை யுள்ளவர்! இந்த கொடிய நாட்களிலும் ஆவியின் வரங்களை நாடும் தாசர்களை எழுப்பி, இந்த பூமியில் புதிய ஏற்பாட்டின் ஊழியத்தை மாசுபடாமல் நிரூபித்து கர்த்தர் வெற்றி சிறப்பார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!