பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


13.06.2024

24. ஒளியில் நடந்திட ‘மனக்கண்கள்’ திறக்கப்படட்டும்!


  ன்று இயேசு, பார்வையற்ற மனிதனைப் பார்த்து “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்றே கேட்டார். அதற்கு அவன் “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்று கெஞ்சினான் (மாற்கு 10:51). தேவனுக்கு முன்பாக அனுதினமும் நிற்கும் நாம் ஒவ்வொருவரும் இவ்வித ‘உள்ளான’ பார்வைக்கே ஜெபம் செய்யக்கடவோம்! “ஓ கர்த்தாவே, என் கண்கள் முதலாவது உம்மை காணட்டும்! பின்பு, எனக்குள் இருக்கும் அசுத்தங்களை காணட்டும்! பின்பு உமது இரட்சிப்பை இழந்து தவிக்கும் வெளியுலக மானிடரை காணட்டும்..... எனக்குப் பார்வை தாரும் ஐயா” என்றே ஜெபிக்கக்கடவோம். இவ்வாறாக ஜெபிக்கும்படியே தாவீதும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்: “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னை சோதித்து என் சிந்தைகளை அறிந்து கொள்ளும், வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ? என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம்.139:23,24). இவ்வாறு அனுதினமும் தேவனுக்கு முன்பாக தங்களை சோதித்து வாழும் பரிசுத்தவான்கள் மாத்திரமே, பிரசங்க பீடம் ஏறும்போது அனல் கொண்டு நிற்பார்கள்! அங்கு சபை நடுவில், ‘அக்கினி பிழம்புகள்’ கிரியை செய்யத் தொடங்கும்!! 

- ரத்னம்


வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!