பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
18.01.2018

03. சுய நம்பிக்கை முறியும் இடமே, தேவ ராஜ்ய முதல்படி!

image

பணமிருந்தால், இந்த உலகில் நாம் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்றே உலகத்தார் எண்ணுகிறார்கள்! அது, அவர்களைப் பொறுத்தமட்டில் சரிதான். ஆனால், அதேபோன்ற நம்பிக்கையோடு ஒரு பணக்காரன் ‘நித்தய ஜீவனை’ அடைவதற்கும் வந்தான் என்பதைத்தான் மாற்கு.10:17 சம்பவம் சித்தரிக்கிறது.

இதுபோன்று “ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள்” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது என, இயேசு உறுதிபட கூறிவிட்டார் (வசனம்.24).

25-ம் வசனத்தில், சுய நம்பிக்கைக் கொண்டவர்கள் நித்திய ஜீவனை அடைவது முற்றிலும் அரிது என்பதை வலியுறுத்த “ஊசி முனைக்குப் பின்பாக” தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நித்தியஜீவனை இயேசு காட்டினார்!

“அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்?” என்ற சீஷர்களின் கேள்விக்கு “மனுஷனால் இது கூடாதது” என்ற விடையை தந்தார். ஆம், மனுஷன் தன்னுடைய எந்த முயற்சியையும் கொண்டு நித்திய ஜீவனுக்குள் பங்கு பெற முடியாது, என்ற இடத்தை நாம் அடைவதே நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த நல்ல விடையாகும்!

“என்னால் முடியாது!” என்ற நொறுங்குண்ட இடத்தை நீங்கள் அடைந்துவிட்டால்..... விசுவாசத்தின் படியில் நீங்கள் ஏற தகுதி பெற்று.... தேவனால் கூடும் என்ற பாக்கியமான இடத்தைக் கண்டடைந்து, அவர் தரும் “மறுமையின் நித்திய ஜீவனை” நாம் நிச்சயமாய் பெற்று விடுவோம்! (வசனம்.30).

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!