பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
05.11.2020

10. அன்பின் சுடரில் மங்காத இயேசுவின் சீஷன்!

image

இயேசுவின் சீஷன் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் தேவசித்தத்தை அறிவதற்காக எப்போதும் தன்னை விழிப்போடு வைத்துக் கொள்வான்!

இவன் தேவனோடு வைத்திருக்கும் உறவாடும் ஐக்கியத்தை எந்த ஒரு அலுவலோ அல்லது உரையாடும் நேரமோ, ஓய்ந்திருக்கும் நேரமோ அல்லது வேறு எதுவுமோ முறித்திட அனுமதிக்க மாட்டான். ஆம் இவன் தேவனோடு இடைவிடாமல் நடந்து சஞ்சரிப்பான்!

இந்த உண்மை சீஷன், “தேவனை நேசிப்பவன் தன் சகோதரனையும் நேசிக்கிறான் என்ற சத்தியத்தை தன் இருதயத்தில் நிரந்தரமாய் பதித்துக் கொள்வான்.” ஆகவே, இவன் தன்மீது எவ்வளவு கவனம் செலுத்துகிறானோ, அதே அளவு கவனத்தை தன் அயலானிடத்திலும் செலுத்துவான். ஆம், இவன் இருதயம் ஒவ்வொருவருக்காகவும் அன்பினால் நிறைந்து ததும்பியிருக்கும். “விசேஷ நண்பர்கள்” என்ற குறுகிய வட்டத் திற்குள் இவனுடைய அன்பு தேங்கிவிடாமல் எல்லா மனுக்குலத்தையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டோனாயும் இருப்பான். இவனை பகைப்பவர்கள் கூட, பதிலுக்கு ‘அன்பையே’ பெற்றுக் கொள்வார்கள். தன்னை பகைத்து தூஷிப்பவர் களுக்கு நன்மை செய்திட தன்னிடம் திராணியில்லாத பட்சத்தில், அவர் களுக்காக அன்போடு ஜெபிப்பான். ஆகவே, இவனுடைய இருதயம் எப்போதும் ஓர் சுத்த இருதயமாகவே திகழ்ந்திடும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!