நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
10.04.2025
15. என்னை விட்டு நீங்காத “என் ஆசீர்வதிக்கப்பட்ட சிலுவை!”
அன்று எனக்குள் பிரவேசித்த ஒரு மாற்றத்தைக் கண்டேன். ஆம், தொடர்ந்து பல வாரங்களாக என்னைச் சுற்றி இடைவிடாது துன்புறுத்திய வெளிப்பிரகாரமான சிலுவைகள் என்னை விட்டு விலகியது!
ஆனால் நடந்த கொடுமை என்னவென்றால், சொல்லொண்ணா துன்பங்களை விட ‘சிலுவை என்னைவிட்டு விலகியதே’ மகா கொடிய தண்டனையாய் எனக்குத் தோன்றியது.
அப்போது, புனிததெரசா அம்மையார் கூறிய வாசகம் என் உள்ளத்தைக் கவர்ந்துக்கொண்டது. அவர்கள் கூறியதைப்போலவே இப்போது நானும் “ஓ கர்த்தாவே நான் பாடுபடட்டும் அல்லது சாகிறேன்!” என கண்ணீரோடு ஜெபித்தேன். ஏனெனில் சிலுவை என்னை விட்டு விலகியதை நான் அனுபவித்தது பெரும் துன்பத்தை என் இருதயத்தில் ஏற்படுத்தியது. நான் கசிந்து மன்றாடி “ஆசீர்வதிக்கப்பட்ட சிலுவையே, நீ வருக!” என ஜெபித்தேன். என் ஜெபம் உடனே கேட்கப்பட்டது. என்னுடைய வாஞ்சையின்படி, நான் இழந்த சிலுவை மீண்டும் என்னைத் தழுவியது. அது எத்தனை பாரமாயிருந்தாலும், யாதொருவர் உதவியற்ற தனித்து விடப்படுவதாயிருந்தாலும், நூதனநிகழ்வுகளாக சிலுவை தரப்பட்டாலும்.... அதை நான் மலர்ந்து ஏற்றுக்கொண்டேன்!
-(மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)