நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

08.01.2026
2. குறைச்சலை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்!

“கொஞ்சம் தவிர வேறு ஒன்றும் இல்லை” எனக் கூறியதைக் கேட்ட ஆண்டவர் “அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என அழைத்தார் (மத்.14:17,18).
குறைச்சலான பாத்திரங்களை தேவனிடத்தில் கொண்டு வாருங்கள். அந்த பாத்திரங்களை விசுவாசத்தோடும் ஜெபத்தோடும் அவருக்கு முன்பாக ஏந்திப் பிடியுங்கள். அலைமோதும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, கர்த்தர் தமது கிரியையை துவங்கும் வரை, அந்தப் பாத்திரத்தை ஏந்தி நில்லுங்கள். கர்த்தர் எதுவும் உங்களுக்கு கட்டளையிடாத பட்சத்தில் ‘யாதொரு கிரியையையும் நீங்களாகவே செய்யாமல்’ பாத்திரத்தை ஏந்தி நில்லுங்கள்!
“அவர் வந்து கிரியை செய்யும் வரை” என்ற நல்ல சந்தர்ப்பத்தை நீங்கள் ஆயத்தம் செய்து கொடுத்தால், கர்த்தர் வருகை தந்து கண்டிப்பாய் கிரியை செய்வார்!
- ரத்னம்
