நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
09.03.2023 |
04. ஊழியத்தில் தியாகமா? ஆதாயமா? வெளியரங்கமாக்கும் கர்த்தர்! |
திரள்கூட்டம் இயேசுவைப் பின்சென்ற போதிலும் எல்லாரையும் அவர் நம்பவில்லை. அவர்கள் அவர் உபதேசத்தை ஆவலோடு கேட்டார்கள். ஆகிலும், எல்லாரும் அவருக்குச் சீஷராகவில்லை! முடிவுபரியந்தம் நிலைநிற்கவுமில்லை! இக்கால ஊழியத்தில், ஒரு கிராமத்தார் கொஞ்சம் இணங்கினால், நாம் சந்தோஷத்தோடு அவர்களை மார்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம்! நமக்குத் தொகை பிரியம்!... ஆண்டவருக்கு உண்மை பிரியம்! அவர் மனுஷருள்ளத்தை அறிந்தவரான தால், புறம்பான எழுப்புதலில் மயங்குகிறவரல்ல. தமக்குச் சீஷராவது லேசான காரியமல்லவென்று திட்டமாய் போதித்தார்!
எப்படியென்றால், ஒரு சமயம் வேதபாரகனொருவன் அவரிடத்தில் தனித்து வந்து: போதகரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். ‘வார்த்தைகளை மாத்திரம் பார்த்தால்’ நிகரற்ற பிரதிஷ்டையுள்ளவன்போல் தோன்றினான்! ஆனால் ஆண்டவரோ, அவன் நோக்கத்தை அறிந்திருந்தார்! அவன் உலகசிந்தையுள்ளவன். கிறிஸ்துவோடு சேர்ந்து கொண்டால், தனக்கு மேன்மையான பதவி கிடைக்கும் என்று எண்ணி அப்படிச் சொன்னான். “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்றே, தன்னைப் பின்பற்றும் ஊழியனின் தரத்தை கூறினார்! ஆண்டவர் கொடுத்த உத்தரவால் அவனுடைய அந்தரங்கம் வெளிப்பட்டது! தன்னை உற்சாகமாய் பிரதிஷ்டை செய்த வேதபாரகன், மறுவார்த்தையின்றி வந்தவழியே திரும்பினான்! இயேசு தன் சொந்த நாசரேத் ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்று செய்த தியாக ஊழியத்தைப்போல், தன் குருவைப் பின்பற்றும் ஊழியர்கள் வெகு சொற்பமே இருக்கிறார்கள்!
09.03.2023 |
04. ஊழியத்தில் தியாகமா? ஆதாயமா? வெளியரங்கமாக்கும் கர்த்தர்! |
திரள்கூட்டம் இயேசுவைப் பின்சென்ற போதிலும் எல்லாரையும் அவர் நம்பவில்லை. அவர்கள் அவர் உபதேசத்தை ஆவலோடு கேட்டார்கள். ஆகிலும், எல்லாரும் அவருக்குச் சீஷராகவில்லை! முடிவுபரியந்தம் நிலைநிற்கவுமில்லை! இக்கால ஊழியத்தில், ஒரு கிராமத்தார் கொஞ்சம் இணங்கினால், நாம் சந்தோஷத்தோடு அவர்களை மார்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம்! நமக்குத் தொகை பிரியம்!... ஆண்டவருக்கு உண்மை பிரியம்! அவர் மனுஷருள்ளத்தை அறிந்தவரான தால், புறம்பான எழுப்புதலில் மயங்குகிறவரல்ல. தமக்குச் சீஷராவது லேசான காரியமல்லவென்று திட்டமாய் போதித்தார்!
எப்படியென்றால், ஒரு சமயம் வேதபாரகனொருவன் அவரிடத்தில் தனித்து வந்து: போதகரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். ‘வார்த்தைகளை மாத்திரம் பார்த்தால்’ நிகரற்ற பிரதிஷ்டையுள்ளவன்போல் தோன்றினான்! ஆனால் ஆண்டவரோ, அவன் நோக்கத்தை அறிந்திருந்தார்! அவன் உலகசிந்தையுள்ளவன். கிறிஸ்துவோடு சேர்ந்து கொண்டால், தனக்கு மேன்மையான பதவி கிடைக்கும் என்று எண்ணி அப்படிச் சொன்னான். “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்றே, தன்னைப் பின்பற்றும் ஊழியனின் தரத்தை கூறினார்! ஆண்டவர் கொடுத்த உத்தரவால் அவனுடைய அந்தரங்கம் வெளிப்பட்டது! தன்னை உற்சாகமாய் பிரதிஷ்டை செய்த வேதபாரகன், மறுவார்த்தையின்றி வந்தவழியே திரும்பினான்! இயேசு தன் சொந்த நாசரேத் ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்று செய்த தியாக ஊழியத்தைப்போல், தன் குருவைப் பின்பற்றும் ஊழியர்கள் வெகு சொற்பமே இருக்கிறார்கள்!