நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
29.05.2025
22. பிள்ளைகளுக்கு அவ்வப்போது ‘சுதந்திர சிறகுகள்’ வழங்கும் தாய்!
பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தவுடன், அவர்களை “நம் சகோதரிகளை போலவே” பாவித்து நடத்த வேண்டும்! அல்லாமல், ஒரு அடிமையைப் போல் எண்ணி நடத்தக்கூடாது. பிள்ளைகளுக்கு முன்பாக எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த தாயாகவே காணப்பட வேண்டும். அப்போது மாத்திரமே, பிள்ளைகள் தாயின் சமூகத்திற்கு வருவதற்கு மகிழ்ச்சியாயிருப்பார்கள். தன் தாயின் சமூகத்தில் மகிழ்ச்சியாயிருக்கும் பிள்ளைகள்..... வேறொன்றை நாடி சென்றுவிட மாட்டார்கள். மேலும் பிள்ளைகளுக்குரிய நியாயமான சுதந்திரங்களை வழங்குவதற்கு ஒரு தாய் ஆயத்தமாயிருக்க வேண்டும். பிள்ளைகளை ‘கூட்டில் அடைபட்ட பறவைகள் போல்’ வைத்து விட்டால், கூட்டை விட்டு தப்பிச் சென்று, பின்பு தன் கூட்டிற்கு திரும்பி வர விரும்பாத பறவைகளாய் மாறிவிட முடியும்!
தன் பிள்ளைகளை தேவபக்தியில் வளர்க்க பிரயாசப்படும் தாய், அவ்வப்போது பிள்ளைகள் சிறகுகளை எடுத்துச் சென்று பறக்க அனுமதிக்க வேண்டும். அவ்வப்போது பறப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் மாத்திரமே, அவர்கள் மகிழ்ச்சியுடன் கூட்டிற்குத் தாங்களே திரும்பி வருவார்கள்!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)