நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
22.05.2025
21. சுகம் பெற்ற நான் செலுத்திய ‘கண்ணீர் நன்றி அஞ்சலி!’
வியாதிபடுக்கையில், என்னை சுகமாக்கும்படி என்னை சந்தித்த தேவ அன்பு, என் இருதயத்தை இன்னும் வலிமையாய் ஸ்திரப்படுத்தியது! என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் எந்த சூழ்நிலையிலும், என் நல்ல ஆண்டவருக்கு இன்னும் அதிக பிரியமாயும் உண்மையாயும் வாழ்வதற்குரிய வாஞ்சையை என் இருதயத்தில் அதிகமாய் பெற்றேன்!
இவ்வாறு, யாருமே நம்ப முடியாத அளவிற்கு தேவன் எனக்குத் தந்த பூரண சுகத்தை எண்ணி எண்ணி என் உள்ளம் பூரிப்படைந்தது! என் இருதயத்தின் பூரிப்பில் நிறைந்தவளாய் “ஓ என் கர்த்தாவே! ‘உம்முடைய நேரம்....’ என உமது வேதம் கூறும் ஆச்சரியமான சத்தியம் என்னை பரவசப்படுத்துகிறது! நான் இந்த உலகத்தில் வாழ்ந்து முடியப்போகும் ‘அந்த நேரம்....’ உம்முடைய கரத்தில் பத்திரமாயிருப்பது எனது பாக்கியம்! நீர் எனக்கென்று அழகுபட வரைந்து வைத்திருக்கும் ‘வாழ்க்கை சித்திரம்’..... இந்த உலகத்திலுள்ள யாதொருவரும் என்னை குறித்த முடிவின் எதிர்பார்ப்பிற்கு, முற்றிலும் நேருக்கு மாறாகவே நேர்த்தியாய் வைத்திருக்கிறீர்! ஓ என் கர்த்தாவே, உம்முடைய இரக்கத்தின் மகளாய் என்னை தெரிந்து கொண்டீர்! உம்முடைய நியாயங்கள் என்மேல் நிறைவேற, உமது தீர்மானத்தின்படியே என்னை வடிவமைத்துக் கொண்டீர்! உமக்கு நன்றி!” என்ற ஜெபத்தின் கண்ணீர் துளிகளால் என் நேசரின் கால்களை நனைத்தேன்!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)