பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


03.08.2024

வாலிபனே, உன் இருதயம் ‘பொன் விளையும்’ பூமியாகட்டும்!

 “பொன் விளையும் பூமியில் வேறு எதுவும் விளையாது” என்று புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், உலக நேசம் வளரும் ஒரு உள்ளத்தில் நன்மையான வேறு எதுவுமே விளைவதற்கு இடமே கிடையாது! 

 இந்த உலகத்தின் நேசமோ, இல்லை! இந்த உலகத்தின் ஆதாயங்களோ, இல்லை! இந்த உலகத்தின் கவலைகளோ, இல்லை! இந்த உலகத்தின் ஆசை இன்பங்களோ நிரம்பியிருக்கும் ஒரு இருதயம் தேவனுடைய எந்த ஒரு ஆலோசனையையும் அவருடைய எந்த ஒரு புத்திமதியையும் ஏற்றுக்கொள்ள முற்றும் செயலிழந்து போய்விடும் என்ற எச்சரிக்கையை நாம் யாவரும் அறிந்திருக்கக்கடவோம்!

 அது தேவனையும் அவருடைய பரிசுத்தத்தையும் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிடும் இருதயம்! அநேகம் பிசாசுகளால் சூழப்பட்டதோர் இருதயம்! அப்படிப்பட்ட ஓர் இருதயம், பரிசுத்தம் என்ற மதுரமான தேன்கூட்டுத் துணிக்கையை அருவருப்பாக எண்ணி வெறுத்துத் தள்ளிவிடும் என்பதில் ஆச்சரியம் கொள்ளுவதற்கு ஒன்றுமே இல்லை! 

 அவ்வித உலக நேசத்தால் ஊறிப்போன இருதயம் பரிசுத்தத்தைப் பகடி பண்ணி, அந்த மேன்மையான பரிசுத்தத்தை மாபெரும் மதிகேடு என்று உதாசீனம் பண்ணுவதைக் காண்பது போன்ற, அத்தனை பெரிய ஆச்சரியமான காரியம் வேறொன்றுமில்லை என்றே கூறலாம்! அந்தப் பொல்லாத இருதயம் அதைத்தான் செய்யும். பரிசுத்தவான் ‘தாமஸ் புரூக்ஸ்’ மேல்கூறிய செய்தியின்படி, உங்கள் இருதயம் ‘பொன் விளையும்’ நல்ல இருதயமா? அல்லது கேடுபாடுகளும், தீய பழக்கங்களும் நிறைந்த ‘கெட்ட இருதயமா?’ என்பதை சோதித்தறிந்து, வாலிபனே, இன்றே உன் இருதயத்தை இரட்சகரிடம் திருப்பி, நல்ல இருதயமாய் நிலைத்து வாழ தீர்மானம் செய்வாயாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!