பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
14.02.2022

தேவனுடைய இரட்சிப்பின் கிரியை துரிதப்படும் காலம் இது!

மீபத்தில், தேவ ஊழியத்தின் பாதையில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி என்ற இடத்திற்கு சுவிசேஷ கூட்டம் நடத்த சென்றிருந்தோம். மணாலியிலுள்ள மிஷன் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு சிறிய ஹாலில் அந்த கூட்டம் நடைபெற்றது. எதிர்ப்பு பல இருந்தாலும், நாங்கள் ஆச்சரியப்படும் வரையில் திரளான ஜனங்கள், அந்த அரங்கத்தை நிறைத்துவிட்டார்கள்!  அந்த சுவிசேஷ கூட்டத்தில் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு காட்சி என்னவெனில், ஒரு புத்தமத வயதான லாமா அங்கு வந்து தேவனை தொழுது கொண்டதுதான்! லாமாக்கள் அணியக்கூடிய உடையிலேயே அவர் வந்திருந்தார். தேவன் அந்த மனிதரை எப்படி சந்தித்தாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஆண்டவரின் அடிமையாக அங்கே தனது முழங்கால்களை முடக்கியிருந்தார்.  ஒரு முழு உலகமே ஒன்று சேர்ந்து ஒரு புத்தமத லாமாவை இயேசுவண்டை வழி நடத்துவது என்பது கற்பனைகூட செய்து பார்க்க முடியாத காரியமாகும்! எனினும், தேவ கரம் அந்த வைராக்கிய புத்த மார்க்கத்தானை நித்திய ஜீவனுக்கு சுதந்திரவாளியாகச் செய்திருந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! பாருங்கள், எந்த மனிதனையும் பிரகாசிக்கச் செய்கின்ற இயேசு! என யோவான் முதலாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இந்த கடைசி நாட்களில், ஆத்துமாக்களை இரட்சிக்க, அவர்களின் இருள் நீக்கி ஒளிதர, தேவன் வல்லமையாய் கிரியை செய்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்! எத்தனை எதிர்ப்பு இருந்தாலும், யாரெல்லாம் தைரியமாய் இயேசுவின் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்களோ, அவர்களின் பிரயாசத்திற்கேற்ற பலனை, முன்பைவிட அதிகமாய் இந்நாட்களில் தந்திடுவார்! ஆம், வாலிபனே, நீயும் இரட்சிக்கப்படுவாய்.... உன் வீட்டார் அனைவரையும் இரட்சிப்பார்!

                                                                                                         - வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!