பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
12.08.2022

ஓ வாலிபனே ‘தெய்வம் உண்டு’ என அறிவாயாக!

னது வகுப்பு ஆசிரியர் “தேவன் ஒருவர் இல்லவே இல்லை” என்று சாதித்து நின்ற நாஸ்திகன். டாம் பெயின் மற்றும் டார்வின் என்பவர்களின் கொள்கைகளை பின்பற்றிச் செல்லும் தீவிர பக்தனாக இருந்தார். தனது வகுப்பிலுள்ள எல்லா மாணவர்களும் தனது நாஸ்திக கருத்துகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அதற்கு நேர் விரோதமாக எதிர்த்து நின்ற தீபக் ஆகிய என்னை, வகுப்பாசிரியரும், எனது வகுப்பில் பயின்ற மாணவர்கள் எல்லாரும் கேலி பரிகாசம் செய்வதுடன், பற்பலவிதமான வாக்குவாதங்களையும் கேள்விகளையும் என்மீது தொடுத்து வந்தார்கள்.  

அது, தேவனுடைய அன்பில் களிகூர்ந்து, மகிழ்ந்து வாழ்ந்த எனக்கு தாங்கக் கூடாத பாரமான கவலையாக இருந்தது. நான் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து வேதனை கொண்டிருந்தேன். ஆஸ்திகவாதிகளையோ அல்லது வேறு எந்த மனித உதவியையோ, நான் இது சம்பந்தமாக நாடிச் செல்லாமல், தேவனுடைய ‘வேதாகம’ (BIBLE) வார்த்தைகளையே எனது வழிகாட்டியாக எடுத்து இரவும் பகலும் நான் அவைகளை ஆராயத் தொடங்கினேன். எனது படிப்பை ஒரு பக்கம் வைத்துவிட்டு, நாஸ்திக ஆசிரியரையும், அவருடன் சேர்ந்திருந்த மாணவர்களையும் தேவனுடைய வசனங்களைக் கொண்டு, தேவ பெலத்தால் தெளிவடையச் செய்திட என்னை பக்குவப்படுத்தலானேன். இறுதியாக, நான் தேவனுடைய வசனங்களால் என்னை நன்கு இடைக்கட்டிக்கொண்டு, அந்த உறுதியான அஸ்திபாரத்தின் மேல் என்னை நிலைப்படுத்தி நின்றுகொண்டு, எனது நாத்திக ஆசிரியரை தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளுடன் சந்தித்தேன்! 

என்ன ஆச்சரியம், தேவன் அதிசயம் செய்தார். வகுப்பு ஆசிரியரும் அவரது கொள்கைகளை ஏற்று ஆதரித்து அவரைப் பின்பற்றிச் சென்ற மாணவர்கள் யாவரும், தங்களது நாஸ்திக கொள்கைகளிலிருந்து திரும்பி, ஜீவனுள்ள தேவனிடம் வந்தார்கள். அந்த நாஸ்திக எனது வகுப்பு ஆசிரியர், வியக்கத்தகு மாற்றமடைந்து, எனது ஜீவ கால நண்பர்களில் ஒருவரானார்! 

“தேவன் ஒருவர் இல்லை” என தன் இருதயத்தில் கூறிக்கொண்டு வாழும் வாலிப மாணவர்களே, தேவனையும், மரணத்தை வென்ற உயிருள்ள ஆண்டவர் இயேசுவையும் இன்றே விசுவாசித்து, உங்கள் வாழ்வில் ஓர் மகிழ்ச்சியான மாற்றம் பெறுங்கள்!


- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!