பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
05.09.2021

‘ஒரு கழுதை மூலமாய்’ சூதாடியை இரட்சித்த தேவன்!

சூதாட்டத்தில் தேர்ச்சிபெற்ற ஒரு துன்மார்க்கன், தனக்கு வர வேண்டிய பணத்தை வசூலித்திட கழுதையின் மேல் ஏறி தன் கிராமத்தினின்று வடதிசை நோக்கிச் சென்றான். கிராமத்தின் எல்லையை அடைந்ததும், கழுதை மேலும் செல்ல மறுத்தது! கழுதையை மேலும் செலுத்த முடியாது போகவே, தென் திசையிலும் தன் கடன்காரர்கள் இருந்ததால், அந்த திசையில் தனது கழுதையை ஓட்டினான். ரஸ்தா தென்மேற்கிலும், தென்கிழக்கிலுமாக பிரியும் இடம் வரை கழுதை அமைதியாகச் சென்றது. ஆனால், தென்மேற்காக அவன் தெரிந்து கொண்ட பாதையில் கழுதை ஒரு அடிகூட முன் செல்ல மறுத்தது! உதைகளும், வசை மொழிகளும், மன்றாட்டுகளும் வீணாயிற்று!

பொறுமை இழந்த சூதாடி, கழுதையை அதின் விருப்பப்படியே போக விட்டான். அப்பொழுது அது, அவனுக்கு கொஞ்சம் கூட சிரமம் அளிக்காது அமைதியாகச் சென்றது. சிறிது நேரத்திற்குள்ளாக கழுதை ஒரு கிராமத்தை வந்தடைந்தது! கழுதை அங்குள்ள தேவாலயத்தின் முகப்புவாசலின் முன் வந்து நின்றது. பின்னர் அவன் சோர்வுடன் கழுதையிலிருந்து இறங்கி, ஆலயத்தின் அருகே சென்றான். வல்லமையான தேவ செய்திகளால் எழுப்புதலடைந்த அந்த கிராமத்து கிறிஸ்தவர்கள் பாடிய கீதங்களின் இன்னிசை அவனைக் கவரவே அவன் தேவ ஆலயத்தினுள் சென்றான். தங்கள் பாவங்களை கண்ணீ ருடன் அறிக்கையிடுபவரையும், கிறிஸ்துவால் தங்கள் வாழ்க்கையில் பெற்ற சந்தோஷத்தையும், சமாதானத்தையும் குறித்து மலர்ந்த முகத்துடனும், ஒளி வீசும் கண்களுடனும் சாட்சி கொடுப்பவர்களை அவன் அங்கு கண்டான். தேவனது வல்லமையான பிரசன்னத்தில் அவன் தன் பாவங்களைக் குறித்து ஆழமாக உணர்த்தப்பட்டான். தன் பாவ அக்கிரமங்களை சபையில் அறிக்கையிட்டு, தேவன் தமது அதிசயமான கரத்தால் அந்த ஆலயத்திற்குத் தன்னை வழிநடத்தி வந்த விந்தையை எடுத்துரைத்தான். மனந்திரும்பிய அந்த சூதாடி பாவியினிமித்தம், பரலோகத்தில் பேரானந்தம் உண்டாயிற்று! வட மாநில பிராந்தியத்தில், இன்றும் அந்த குக்கிராமம் சாட்சியாக உள்ளது!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!