பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
10.01.2018

ஓ வாலிபனே, உன் ஆத்துமாவின் கரிசனை பெரிதன்றோ?

மிலான் பட்டணத்தில் உள்ள புகழ்பெற்ற அழகான தேவாலயத்தின் முகப்பில் மூன்று நுழை வாயில்கள் உள்ளன. அதின் முதல் நுழை வாயிலில், ஒரு அழகான ரோஜா மலர் வளையம் சித்திரமாகச் செதுக்கப்பட்டு அதின் கீழாக “மனதிற்கு இன்பமோ? அது, ஒரு கண நேரம் மாத்திரமே!” என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது நுழைவாயிலில், ஒரு சிலுவைச் சின்னம் செதுக்கப்பட்டு அதின் கீழாக “இவ்வுலகத்து பாடுகள் எல்லாம், சொற்ப காலமே!” என்று எழுதப்பட்டிருந்தது. தேவாலயத்துக்குள் நுழையும் பிரதான நுழைவாயிலின் மேலே “என்றும் நிலைத்திருக்கும் நித்தியமே நமது பிரதானம்!” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

“ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம், ஆத்துமாவையும், சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத்.10:28) என்று இரட்சகர் இயேசு தமது சீடர்களுக்குப் போதித்தார். மரணமானது ஒரு விசுவாசிக்கு நேரிடக்கூடிய ஒரு சம்பவம் மாத்திரமேதான். காரியம் இப்படியாய் இருக்க, தன் ஆத்துமாவைக் குறித்து அக்கறைப்படவோ இன்று அதிகம் பேர் இல்லை!

அல்லது, “உங்கள் ஆத்துமா, கவனம்!” என எச்சரிக்கும் ஆத்தும பாரம் கொண்ட உண்மை ஊழியர்களும் மங்கிப் போனார்கள்! நீயோ வாலிபனே, உன் ஆத்துமா விலையேறப்பட்டது என்பதை அறிவாயாக! உலக மோகம் உன்னை ஆண்டுகொண்டு, உன் நித்திய ஆத்துமாவை, இந்த உலகின் காலில் நசுங்க வைப்பது நியாயமா?..... இன்றே மனந்திரும்பி, உன் ஆத்துமா, இரட்சகர் இயேசுவால் இரட்சிக்கப்பட உன் உள்ளத்தை அவருக்குத் தருவாயாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!