பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
04.05.2021

வாலிபனே ‘சிலரது ஜெபம்’ உன் ஆத்துமாவை இரட்சிக்கும்!

நான் சந்தித்த இருதய கடினம் கொண்ட அவனை மறக்கவியலாது. ஓ, மனந்திரும்புதலுக்கு அவன் எத்தனை விரோதமாக எதிர்த்து நின்றான்! அவனுக்கு ஒரு பக்தியுள்ள மனைவி இருந்தாள். அவன் அவளை அதிகமாக நேசித்தான். அவனுக்காக அவள் ஜெபிப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் ஆத்துமாவின் நன்மையைக் கருத்தில் கொண்டு நான் அவனிடம் கேட்கும் அன்பான விசாரிப்பின் நிமித்தமாக அவன் எனக்கு விரோதமாக அவ்வப்போது பைத்தியம் கொண்டவனைப்போல சீறி எழும்பி விடுவான்.

இதன் பின்னர் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்னர், நான் அவனைப்பார்த்து “சிநேகிதனே, நீங்கள் உங்கள் இருதயத்தை இரட்சகர் இயேசுவுக்குக் ஒப்புக் கொடாத வரை உங்களுக்கு சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சொன்னேன். அவன் கோபத்தால் வாயில் நுரை தள்ளிக்கொண்டு உரத்த குரலில் “நீ இந்த இடத்தைவிட்டு உடனே போய்விடு, நான் உன் முகத்தை இனிமேல் பார்க்கக் கூடாது, இல்லையேல் நான் உன்னைக் கொன்று போடுவேன்” என்றான்.

அடுத்த முறை நான் அந்த மனிதனுடைய வீட்டு வழியாக கடந்து சென்றபோது, அவன் என்னைக் கண்டதும் என்னுடைய கண்ணில் படாதபடிக்கு ஒளித்துக் கொள்ள முயற்சிப்பதை நான் தூரத்திலிருந்து கவனித்தேன். வீட்டுக்குப் பின்னர் உள்ள தானியக் களஞ்சியத்திற்குச் சென்று கதவைப் பலமாகத் தட்டினேன். சற்று நேர இடைவெளிக்குப் பின்னர் தானியக் களஞ்சியத்தின் உள்ளே பெருமூச்சுகள் எழும்பும் சத்தத்தை நான் கேட்டேன். அதற்கப்பால் உள்ளே காலடிகள் எடுத்து வைத்து கதவண்டை நடந்து வரும் சத்தத்தை நான் கவனித்தேன். நான் மிகவும் பயத்துடன் அந்தப் கோபக்கார மனிதர் நமக்கு என்ன தீங்கு செய்து விடுவாரோ என்ற எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன். அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. அங்கே அந்த மனிதர் நின்று கொண்டிருந்தான். அந்த முகத்தில் கோபம் என்பது சற்றும் தென்படாதிருந்தது. அவர் என்னிடம் பேச முயற்சித்தார், ஆனால் அவரால் கூடாது போயிற்று.

நான் அவரிடத்தில் நடந்து சென்று அவருடைய கரங்களைப் பற்றிப் பிடித்து “என் அருமை சகோதரனே, நாம் இப்பொழுது ஜெபம் பண்ணுவோம்” என்று இருவருமாக முழங்காலூன்றினோம். அந்த இடத்தில் எங்களுடைய வார்த்தைகளைவிட இருவர் கண்ணிலும் கண்ணீர்தான் அதிகமாகக் கொட்டினது. இருவரும் ஒன்றாக வருவதை அந்த மனிதரின் மனைவி தூரத்திலிருந்து பார்த்தபோது, அவர்களின் முகம் ஆனந்த சந்தோஷத்தால் நிரம்பியதை எங்களால் காண முடிந்தது!

வாலிபனே, யாரோ சிலர் ஜெபத்தால், உன் ஆத்துமா இரட்சிக்கப்படும் விந்தையை அறிவாயாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!